காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் செய்யூர், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற உள்ள அவசர செயற்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்.