லடாக்: இந்தியா-சீன எல்லையில் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் எல்லையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் எல்லையில் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்ததால், போர் பதற்றம் உருவானது. அதன்பின்னர் ஜூன் மாதம் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து எல்லையில் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்தது. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன.