சென்னை: சென்னையில் தினசரி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 670 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 108 பேர் 14 நாட்கள் நிறைவு செய்துள்ளனர். மீதம் 1 லடசத்து 19 ஆயிரத்து 872 பேர் தற்போது தனிமையில் உள்ளனர். கொரோனா பாதித்தக்கபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 84 ஆயிரத்து 117 பேர் 14 நாட்கள் தனிமையை நிறைவு செய்துள்ளனர். 1 லட்சத்து 58 ஆயிரத்து 846 பேர் தற்போது தனிமையில் உள்ளனர்.