திருமலை: ஆந்திராவில் கொரோனாவால் இறப்பவரின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கும்படி முதல்வர் ஜெகன் மொகன் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், தாடேப்பள்ளி முகாம் அலுவலகத்தில் கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெகன் மொகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அவர் பேசியதாவது: கொரோனா மருத்துவமனைகள், தனிமை மையங்களில் சிறந்த மருத்துவ சேவை வழங்க வேண்டும். நோயாளிகளின் குறைகள் குறித்து புகார் தெரிவிக்க இலவச கால் சென்டர் எண்ணுடன் ‘விளம்பர பேனர்கள்’ அமைக்க வேண்டும். நோயாளிகளிடம் தினமும் போன் செய்து விசாரிக்க வேண்டும். சுகாதாரம், உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.