தாம்பரம்: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் 11 மதகுகள் கூடிய மிகபெரிய தடுப்பணையை பொதுப்பணித் துறையினர் கட்டி வருகின்றனர். இந்த பகுதியை ஒட்டி பெரியார் நகர், பெரியார் நகர் விரிவு, ஜெயலஷ்மி நகர், பாரதமாதா நகர் என சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்நிலையில், அடையாறு ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை காரணமாக அதன் அருகே உள்ள வீடுகளை இடித்து அகற்ற பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரங்களை கொண்டுவந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்குள்ள குடியிப்புவாசிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.