கொடைக்கானல்: கொடைக்கானலில் தனியார் பள்ளியில் தாகம் தீர்க்க வந்த காட்டுமாடு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் நேதாஜி நகர் பகுதியில் உள்ளது தனியார் பள்ளி. இதன் வளாகத்திற்குள் பெரிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இதில் நேற்று தண்ணீர் குடிப்பதற்காக காட்டுமாடு கூட்டம் வந்தது. அப்போது நிலைதடுமாறி ஒரு காட்டுமாடு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. வெகுநேரமாகியும் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து காட்டுமாடு வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியது.