குடியாத்தம்: ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் குடியாத்தம் மோர்தானா அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆந்திர-தமிழக எல்லையோரம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணை கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக விளங்குவது இந்த அணை. குடியாத்தம் பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணையின் நீளம் 392 மீட்டர், உயரம் 23.9 மீட்டர், அணையின் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர், அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கன அடி ஆகும்.