சென்னை: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், ஆசிரியர்களுக்கு போதுமான வசதி செய்து தராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘‘ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை. தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளத்தான் அவர்களை கேட்டுள்ளோம்.