சென்னை: தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,47,574 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக ரூ.17.90 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 6,33,555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்; 7,72,585 வழக்குகள் பதிவாகியுள்ளது.