சென்னை: ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பானது உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது சென்னையை போலவே தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது காணமுடிகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 333 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் பணிகளில் மாநகராட்சி ஆய்வாளர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.