ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரிலுள்ள காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன் முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்பட்டு ஆச்சரியம் தருகிறது. டிக்கெட் கலெக்டர் டூ ஸ்டேஷன் சூப்பரின்டெண்டென்ட் வரை அனைத்து பதவிகளும் பெண்களுக்கு மட்டுமேதான். தினமும் இங்கு வரும் 75 ரயில்களில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.