சென்னை: கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த மே 25ம் தேதியில் இருந்து குறைந்தளவு விமான சேவைகளுடன் இயக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. அதேநேரத்தில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.