சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்குகளை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக, திராவிடர் கழகம், அதிமுக, மதிமுக, பாமக, தமிழக அரசு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.