மதுரை: நெல் கொள்முதல் மையத்தை மூடக்கூடாது, மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பெரியாறு - வைகை திருமங்கலம் பாசன கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்ளிட்ட விவசாயிகள், கலெக்டர் வினய்யிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், சொக்கத்தேவன்பட்டி, செல்லம்பட்டி, வின்னக்குடி, அய்யனார்குளம் உள்ளிட்ட 9 கிராம பகுதிகளில் கோடை நெல் அறுவடைக்காக 21 நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது, உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய கிராம பகுதிகளில் இருந்து கோடையில் அறுவடை செய்த நெல்லை, விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.