சிங்கம்புணரி: சிங்கம்புணரி பள்ளங்குண்டு ஊரணியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. சிங்கம்புணரி திருப்பத்தூர் சாலையில் உள்ள பள்ளங்குண்டு ஊருணி குடிதண்ணீர் ஊரணியாக இருந்தது. காலப்போக்கில் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஊருணி இருந்த இடம் தெரியாமல் போனது. இதையடுத்து கடந்த ஆண்டு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் தூர்ந்து போன ஊருணியை மீண்டும் தூர்வாரும் பணி நடைபெற்றது. ஆக்கிமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தூர்வாரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.