மதுரை: இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் எய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கொரோனா பரவலை தடுக்க அரசு நெறிமுறைகளை வகுத்தாலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும் முடியும் என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வீரராக இருந்தாலும் கொரோனாவிடம் எச்சரிக்கை உணர்வோடு தான் இருக்க வேண்டும் என கூறிய அமைச்சர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மதுரையில் உள்ள கிராமங்களுக்கு வருபவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும்,நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறிய அமைச்சர், கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் எனவும் கூறியுள்ளார்.