சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழக அரசின் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் மொத்தம் 40 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இங்கு தங்கி இருக்கும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி 9வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர், 2 மற்றும் 6வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதன்படி சிகிச்சை பெறுவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக மருத்துவமனையில் இயக்குநர் மற்றும் தலைமை மேற்பார்வையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.