தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் காய்கறி சந்தையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி சந்தையில் முதலில் 20 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அந்த சந்தையில் பணிபுரியும் 104 வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிதாக மேலும், 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக விளாத்திகுளம் சந்தையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,271ஆக உள்ளது. இவற்றில் 865 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 401ஆக உள்ளது. தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.