சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 38 வயது ஆண் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.