சென்னை: ஊரடங்கு காலத்தில் குடும்பத்தினர் அனைவருமே வீடுகளில் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட காலத்தில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே வீடுகளில் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு. மேலும், கொரோனா காலத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கணக்கெடுப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவையே அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.