வளர்மதி, எம்எல்ஏ அர்ச்சுனன் விரைவில் நலம்பெற வேண்டும்: முதல்வர் எடப்பாடி டிவிட்டரில் கருத்து

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அதிமுக எம்எல்ஏ அர்ச்சுனன் விரைவில் நலம்பெற முதல்வர் எடப்பாடி டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: