வருவாய்த்துறை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த வாரம் ஜமாபந்தி நடந்தது. கிண்டி ஆர்டிஓ தலைமையில் நடந்த இந்த ஜமாபந்தியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் நில அளவைப்பிரிவு பெண் ஊழியர் ஒருவர் காயச்சலுடன் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கெரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் ஜமாபந்தியில் பங்கேற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, ஜமாபந்தியில் பங்கேற்ற மற்று ஊழியர்களுக்கும் கெரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தாசில்தார் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: