வருஷநாடு: வருசநாடு அருகே செந்நாய் கடித்ததில் கடமான் பலியானது. தேனி மாவட்டம் வருசநாடு அருகே மண்ணூத்து அடுத்துள்ள மேகமலை வனப்பகுதியில் கடமான்கள் அதிகளவில் உள்ளன. நேற்று காலை 3 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் ஒன்று செந்நாய்களால் தாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் மண்ணூத்து கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு பொதுமக்களை பார்த்து பயத்தில் தெருக்களில் ஓடிய கடமான் இறுதியாக மயக்கம் டைந்து கீழே விழுந்தது.