பிரதமர் மோடி ஆய்வு எதிரொலி: கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம் நீக்கம்; 2 கி.மீ வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்..!!

டெல்லி: கால்வானில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20  இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி  உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த  நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி கடந்த 3-ம் தேதி காலை 9.30  மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்ப்ஸ் கமாண்டர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன இராணுவம் கூடாரங்கள், வாகனங்கள்  மற்றும் துருப்புக்களை 1-2 கி.மீ தூரத்திற்கு பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன கனரக வாகனங்கள் ஆயுதங்களுடன் கால்வான் நதி பகுதியில் இன்னும் உள்ளன என்றும் இந்திய இராணுவம் நிலைமையை எச்சரிக்கையுடன்  கண்காணித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தீவிர இராஜதந்திர மற்றும் இராணுவ ஈடுபாடு மற்றும் தொடர்புகளின் விளைவாக நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புகள் பிரதமர் மோடியின்  லே பயணத்தைத் தொடர்ந்து ஒரு தீர்க்கமான மற்றும் உறுதியான செய்தி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி-யில் இந்தியாவின் பொறுப்பான நிலைப்பாடு மற்றும் செய்தி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் இந்தியா-சீனா உறவில் முதலீடு செய்யப்பட்டவை தற்போதைய நிலைப்பாட்டை தீர்க்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளன.  தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்ற தீர்க்கமான செய்தியை இந்தியா அனுப்பியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: