மதுரை: காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனு தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.