சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி கூற வேண்டும் என்று பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் பாசிட்டிவிட்டி விகிதம் குறைவாக தான் உள்ளது.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிகின்றனர். எஞ்சிய 35% பேரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

மார்க்கெட், மளிகை, இறைச்சிக்கடைகளில் 22% மக்கள் தான் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மாநகராட்சி ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 11,200 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 1000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 4, 5, 6 ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. போதிய விழிப்புணர்வு, முகக்கவசம் வழங்கப்பட்டதால் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் தொற்று குறைந்தது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: