சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கள பணியாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.