சீர்காழி: ஊரடங்கு உத்தரவால் மகன், மகள், பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லை என்ற மனவேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் மன்னர் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி(70). மீன் வியாபாரி. இவரது மனைவி பாக்கியவதி(65). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக மகன், மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாமல் தம்பதியினர் தவித்து வந்ததோடு, மனவேதனையில் இருந்தனர்.