திருவனந்தபுரம் : கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலியிடம் மத்திய அரசு இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள் இத்தாலி கடற்படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இத்தாலி கடற்படை வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இத்தாலி வீரர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வரவில்லை என்று அந்நாட்டு அரசு கூறி வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், இத்தாலி வீரர்கள் விதிகளை மீறி, நடந்து கொண்டதாக தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த மீனவர்களுக்காக இந்திய அரசு இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்து இருக்கிறது.