காஞ்சிபுரம்: சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2020 - 2021 ஆண்டுக்கான பல்வேறு கடன்கள் வழங்;கப்படவுள்ளது, இதில் கல்வி, தனிநபர் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில், கறவை மாடு, ஆட்டோ ஆகிய திட்டங்களுக்கு கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே. மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறித்துவ. இஸ்லாமிய. சீக்கிய. புத்த, பார்சி மற்றும் ஜெயின்) https://www.tamco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் (மனுதாரர் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று,