கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2 அதிமுக எம்.எல்.ஏக்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் : முதல்வர் பழனிசாமி

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2 அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.குமரகுரு அவர்கள் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சதன் பிரபாகர் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தி அறிந்து அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Related Stories: