சென்னை : என்.எல்.சி. விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் உரையாடினார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேற்றைய தினம் (1.7.2020) மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் என்னை தொடர்பு கொண்டு என்.எல்.சி. விபத்து பற்றி விசாரித்த போது, நான் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறினேன். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன். எனத் தெரிவித்துள்ளார்.