சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகுகணேஷ்னுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

நெல்லை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகுகணேஷ்னுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்.ஐ. ரகுகணேஷ் நேற்று இரவில் கைது செய்து மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர் செய்யபட்டார். தொடர்ந்து, எஸ்.ஐ. ரகுகணேஷ்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலை கைது செய்யப்பட்ட 3 காவல்துறை அதிகாரிகளும் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: