புதுடெல்லி: ‘சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆறு வாரத்திற்குள் தமிழக டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சிறைத்துறை ஐஜி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்,’ என தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.