சென்னை: சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 58,327 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 34, 828 பேர் குணமடைந்துள்ளனர். 888 பேர் உயிரிழந்துள்ளனர். 22,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 906 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.46 சதவீதம், பெண்கள் 40.54 சதவீதம்.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை நேற்று முன்தினம் ஜூன் 29-ம் தேதி வரை வெளியிட்டு வந்த சென்னை மாநகராட்சி நேற்று ஜூன் 30-ம் தேதி முதல் விவரம் வெளியிடுவதில் மாற்றம் செய்துள்ளது. சென்னையில் தொற்று பாதித்தோர், குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரம் இதுவரை வெளியானது. ஆனால், தற்போது, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.இருப்பினும் மண்டல வாரியாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருபவர், இறந்தவர்கள், குணமடைந்தவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு., மண்டலம் சிகிச்சை உயிரிழப்பு குணம்1 திருவொற்றியூர் 1062 53 11612 மணலி 443 12 5363 மாதவரம் 899 22 9514 தண்டையார்பேட்டை 1,838 131 46685 ராயபுரம் 2,309 141 56396 திருவிக நகர் 1,771 93 29697 அம்பத்தூர் 1,020 29 14328 அண்ணாநகர் 3,166 74 31159 தேனாம்பேட்டை 2051 134 436210 கோடம்பாக்கம் 2,322 75 377611 வளசரவாக்கம் 1175 28 152112 ஆலந்தூர் 800 16 68113 அடையார் 1,594 46 198214 பெருங்குடி 748 17 69115 சோழிங்கநல்லூர் 506 7 680