கார்வார்: சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது தொண்டையில் சமோசா சிக்கியதால் புத்தமத இளம் துறவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகாவின் வடகனரா மாவட்டம் கார்வார் அருகே உள்ள முண்டகோடு நகரில் திபெத்திய முகாம் உள்ளது. இங்கு ஏராளமான புத்தமத துறவிகள் தங்கி உள்ளனர். இந்த முகாமின் ஒரு பகுதியில் கோமங் விருந்தினர் மாளிகை உள்ளது. அங்குள்ள அறை எண் 2ல் மங்கோலியா நாட்டை சேர்ந்த புத்தமத இளம் துறவி பாயர் ஜவக்லான் தங்கி இருந்தார். அவருக்கு நேற்று காலையில் உணவு வழங்கப்பட்டது. அவர் தட்டில் இருந்த சமோசாவை எடுத்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.