சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் மாட்டு வண்டியில் உயர் நீதிமன்றம் வரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாலும், ஊரடங்கு காரணமாக எரிபொருள் தேவை கடுமையாக சரிந்ததாலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி இருந்தது. ஆனால் ஜூன் 7ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயர்த்தி வருகின்றன. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.