சென்னை: காஞ்சிபுரம் பொய்யாகுளம் மாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லிங்கேஷ் (28). சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராகிணி (26). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது ராகிணி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், அஸ்தினாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்த லிங்கேஷ், அஸ்தினாபுரத்தில் உள்ள கர்ப்பிணி மனைவியை பார்க்க இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், மனவருத்தத்தில் இருந்துள்ளார்.