செங்கல்பட்டு : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு அரசாணையின்படி உயர்த்தி வழங்கப்பட்ட ₹3600 இதுவரை வழங்கவில்லை என புகார் எழுப்பினர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சு.பரணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ப.குணசேகரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் பொ.சார்லஸ் சசிகுமார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பேரிடர் காலங்களில் அவசர அவசியம் கருதி சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்ய, பேரிடர் கால நிதியை ஊராட்சி ஒன்றியங்களுக்கு விடுவிக்க கலெக்டருக்கு செயற்குழு வலியுறுத்துகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்களாக 2 நிலைகளிலும் கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி பணி முடித்த மூத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உயர் பதவிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டவர்களும் பதவி உயர்வு துறப்பு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை மூப்பு அடிப்படையில் தலைமை இடத்தில் பணியமர்த்த வேண்டும்.