திருமலை: தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமத் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. கடந்த 2 தினங்களாக முகமத் அலி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஆஸ்துமா இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.