புழல்: புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் இருந்த 30 கைதிகளுக்கும், தூய்மை பணியாளர் மற்றும் 2 காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புழல் சிறை விசாரணை பிரிவில் 45 வயது மதிக்கத்தக்க தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புழல் காவாங்கரை திருநீலகண்ட நகர் மகாவீர் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.