மேலூர்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள மேலூர் பகுதி தொழிலாளர்கள் நீர்நிலைகளில் சகதியில் இறங்கி எஞ்சிய மீன்களை பிடித்து வாழ்க்கையை நகர்த்தும் நிலைக்கு சென்றுவிட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான பலர் கட்டிடம் கட்டும் பணி உட்பட பல்வேறு கூலி வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இவர்கள் வேலை ஏதுமின்றி தவித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வறுமையை போக்கும் வகையில் வேறு வேலை ஏதும் இல்லாமல் உள்ள இவர்கள், கிராமங்களில் உள்ள கண்மாயை நோக்கி திரும்பி உள்ளனர்.