மதிமுக சார்பில் டூரிஸ்ட் வேன் டிரைவர்களுக்கு நிவாரணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் கடந்த 3 மாதங்களாக வருமானம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காஞ்சிபுரம் டூரிஸ்ட் வேன் டிரைவர்கள் சங்கத்தின் 60 உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி தலைமை தாங்கி, அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். காஞ்சி நகர செயலாளர் மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.அருள், காஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ். தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஏகாம்பரம், குணசேகர், கண்ணன், சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள்  சம்பத், உமாசங்கர், சங்கர், காண்டீபன், சரவணன், டூரிஸ்ட் வேன் டிரைவர் சங்க தலைவர் ஜெ.ராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: