மின்னல் தாக்கி விவசாயி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தை சேர்ந்தவர் செங்கையா (50). இவர், நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், அருகில் இருந்த மாந்தோப்பு பகுதியில் செங்கையா மழைக்காக ஆடுகளோடு ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை திடீரென மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செங்கையா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் இருந்த 2 ஆடுகளும் பரிதாபமாக இறந்தது.

Related Stories: