காசி வழக்கு 7 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

நாகர்கோவில்: சமூக வலைதளங்கள் மூலம் பழகி பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் பறித்த காசி  மீது பல்வேறு காவல்  நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது காசி தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், விசாரணைக்கு வரும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய விசாரணை அதிகாரிகளுக்கு  சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி  நேற்று வடசேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் கந்துவட்டி வழக்குப் பதிவு  தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர். இதேபோல  கோட்டாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு  சப்-இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடந்தது. மொத்தம் 7 பேரிடம் நேற்று விசாரணை  நடந்துள்ளது.

Related Stories: