சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காசிபேட்டையை சேர்ந்தவர் ரத்தினம். தமிழக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்த இவர், கடந்த 1975ம் ஆண்டு பணிக்காலத்தில் மரணமடைந்தார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவரின் பணியை கருணை அடிப்படையில் மகனுக்கு வழங்க கோரி ரத்தினத்தின் மனைவி 1998ல் அரசுக்கு மனு அனுப்பினார்.மனுவை பரிசீலித்த பொது சுகாதாரத்துறை, ரத்தினத்தின் மகன் முருகனுக்கு கடந்த 2006ல் மஸ்தூர் பணி வழங்கியது. அவர் பூந்தமல்லி பொது சுகாதார துறை மையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் மாதம் முருகனை பணி நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவிட்டார்.