திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சுதாகர், கீழ்பென்னாத்தூர் தாலுகா, நீலந்தாங்கல் கிராமத்தில், ஆய்வாளர் காந்திராஜன் செயலர் ச.பாலமுருகன், பழனிச்சாமி ஆகியோர் களஆய்வு செய்தனர். அப்போது, பண்டைய கால ஓவியம் சொரட்டுக்கோள் மலை அடிவார பாறை பகுதியில், சிவப்பு மற்றும் வெள்ளை பூச்சுகளால் ஆன பழைய ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது: இங்கு கிடைத்த சிவப்புநிற ஓவியங்கள் புதியகற்கால பாணியை ஒத்துள்ளது. இந்த ஓவிய தொகுப்பிலேயே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற பூச்சுகளால் ஆன ஒவியங்களும் உள்ளன.