காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர் : போதிய மனநல ஆலோசனை வழங்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை : காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர், போதிய மனநல ஆலோசனை வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்துள்ளது. கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: