லடாக்: லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 15, 16ம் தேதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன ராணுவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க சீன ராணுவம் மறுக்கிறது. ஆனால், சீன ராணுவம் தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன படையினர் அத்துமீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன நாட்டின் படைகள், வாகனங்கள் பின்வாங்கியதாக தகவல்!
- துருப்புக்கள்
- சீன
- எல்லை
- பள்ளத்தாக்கு
- லடாக்
- கல்வான்
- பெண்கள்
- கால்வன் பள்ளத்தாக்கு
- வாகனங்கள் பின்வாங்குகின்றன