டிக்கெட் பரிசோதகர் தற்கொலை

பட்டாபிராம்: ஆவடியை அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், 3வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவர், தென்னக ரயில்வேயில் டிக்கெட் பரிசோதராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையில், கடந்த 4மாதங்களுக்கு முன்பு தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா, ராஜேஷ்குமாரை விட்டு பிரிந்து பூந்தமல்லி, கரையான்சாவடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு, ராஜேஷ்குமார் பலமுறை பிரியாவை சந்தித்து குடும்ப நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், பிரியா மறுத்துள்ளார்.

இதனையடுத்து, மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள கிரில் கேட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது தாயார் ரங்கநாயகி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: